10 நிமிடத்தில் வலியில்லாமல் குடும்பக் கட்டுப்பாடு, ஆண்களுக்கு புது அறுவை சிகிச்சை

Read Time:3 Minute, 12 Second

ஆண்களுக்கு பத்தே நிமிடத்தில், வலியில்லாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்யும் புதிய முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அறுவை சிகிச்சை மூலம், குழந்தை பெற்றக் கொள்ளவும் முடியும். தற்போது ஆண்களுக்கு வாசக்டமி முறையில் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இந்த முறையின் மூலம், ஆண்களுக்கு சுரக்கும் உயிரணுக்களை வெளியில் கொண்டு செல்லும் நாளம் துண்டிக்கப்படுகிறது. இந்த அறுவைச் சிகிச்சைக்கு 20 நிமிடம் முதல் 30 நிமிடம் தேவைப்படுகிறது. இந்த அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவர்கள், மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், நாளத்தை இணைப்பது கடினமான செயலாக உள்ளது. ஆனால், தற்போது சீன டாக்டர்கள் கண்டுபிடித்துள்ள புதிய முறைப்படி, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள எளிதில் முடியும். சீனாவின் குகங்சோவில் உள்ள குடும்பக் கட்டுப்பாடு தொழில் நுட்ப மையத்தை சேர்ந்த டாக்டர்கள் இந்த புதிய முறையை கண்டு பிடித்துள்ளனர். இந்த முறைப்படி, விரைப்பையில் மிகச்சிறிய துளையிட்டு, அதன் வழியாக ஒரு மெல்லிய குழாயை டாக்டர்கள் உள்ளே செலுத்துவர். இந்த குழாய், ஆண்களின் உயிரணுக்களை தடுக்கும், ஒரு வடிகட்டியைப் போல செயல்படும். இந்த குழாயை, மீண்டும் அறுவைச் சிகிச்சையில் வெளியே எடுத்துவிடலாம். இதன் மூலம் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும். இந்த புதிய முறைப்படி, அறுவை சிகிச்சைக்கு வெறும் பத்து நிமிடங்கள் போதும். வலியும், வாசக்டமி அறுவை சிகிச்சையை போல, அதிகளவில் இருக்காது. ஆனால், இந்த அறுவை சிகிச்சை கடினமானது என்பதால், இதில் திறமை பெற்ற டாக்டர்கள் மட்டுமே ஈடுபட முடியும். இந்த புதிய அறுவை சிகிச்சை முறைக்கு சீன டாக்டர்கள் காப்புரிமை பெற்றுள்ளனர். தேசிய உணவு மற்றும் மருந்து கழகத்தின் அனுமதி பெற்றதும், அடுத்த ஆண்டு முதல், புதிய முறைப்படி ஆண்களுக்கு குடும்பக்கட்டுபாடு அறுவை சிகிச்சைகள் துவக்கப்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடல் பருமனால் பிரிட்டனில் 2000 பேர் வேலைஇழப்பு * நிதி பெறுவதற்காக நாடகம்?
Next post மீண்டும் மம்பட்டியான்!