இலங்கையில் பத்திரிகை அலுவலகம் எரிப்பு

Read Time:1 Minute, 35 Second

srilanka.gifஇலங்கையில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்ட பத்திரிகை அலுவலகம், மர்ம கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இலங்கையில் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்துக்கள் வெளியிட்ட பத்திரிகை அலுவலகம், மர்ம கும்பலால் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இலங்கையில் “சண்டே லீடர், மார்னிங் லீடர்’ போன்ற பத்திரிகைகளில், ஆளும் மகிந்தா ராஜபக்சே அரசுக்கு எதிராக கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, 15 பேர் கொண்ட மர்மக் கும்பல், இந்த பத்திரிகை அலுவலகத்தில் நேற்று அத்துமீறி நுழைந்தது. இந்த கும்பல், அலுவலகத்தில் அமைந்திருந்த பிரின்டிங் பிரசில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில், அடுத்து வெளிவர இருந்த பத்திரிகைகளும் தீயில் கருகின. இது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள, இலங்கை போலீசார் தனிப்படை ஒன்றை அமைத்துள்ளனர்.இந்நிலையில், வவுனியாவில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையே நடந்த மோதலில் நான்கு புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மீண்டும் மம்பட்டியான்!
Next post நான் கர்ப்பிணி இல்லை நடிகை காவேரி பேட்டி