பாகிஸ்தானில் ரெயில் கவிழ்ந்த விபத்து: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு…!!
Read Time:1 Minute, 12 Second
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் நேற்று ரெயில் கவிழ்ந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிகை 16 ஆக அதிகரித்துள்ளது.
பலூசிஸ்தானின் தலைநகரான குவெட்டாவில் இருந்து ராவல்பிண்டி நகரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை போலான் மாவட்டத்தில் உள்ள அபிகம் பகுதியில் இன்று தண்டவாளத்தில் இருந்து விலகிச் சென்றது.
இதில் அந்த ரெயிலின் நான்கு பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த நூற்றுக்கும் அதிகமானவர்கள் அருகாமையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிகிச்சை பலனளிக்காமல் 7 பேர் இறந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
Average Rating