மிஹிந்தலை:குளக்கட்டில் கைவிடப்பட்ட குழந்தை..!!

Read Time:1 Minute, 41 Second

imagesமிஹிந்தலை, மகாகனதரவ குளக்கட்டின் பக்கமாகவுள்ள குளிக்கும் இடத்தில் மூன்று வயதுடைய ஓர் ஆண் குழந்தை கைவிடப்பட்ட நிலையில் இன்று புதன்கிழமை (18) காணப்பட்டுள்ளது. பிள்ளையின் அழுகையைக் கேட்டு அங்கு வந்த கிராம மக்கள், மிஹிந்தலை பொலிஸாருக்கு அறிவிக்க, பொலிஸார் வந்து குழந்தையைப் பொறுப்பேற்றுள்ளனர்.

பொலிஸாரின் ஆதரவில் அமைதியடைந்த குழந்தை, தனது அப்பா சம்பத் எனவும் அம்மா நிலுகா எனவும், வவுனியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறியுள்ளது.

இங்கு எவ்வாறு வந்தீர்கள் எனக் கேட்டபோது, ஒரு மாமாவோடும் அம்மாவோடும் சைக்கிளில் வந்ததாகவும் மாமா தம்மை விட்டுப் போய்விட்டார் என்றும் கூறியுள்ளது.

பின்னர் அம்மா தன்னை அங்கு விட்டுவிட்டு சவர்க்காரம் வாங்கி வருவதாகக் கூறிப் போய்விட்டார் எனவும் கூறியுள்ளது.

தாய், குழந்தையைக் கைவிட்டு மாமா எனப்படுபவரோடு போய்விட்டார் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

இந்த விசாரணையில் உதவக்கூடியவர்கள், 025-2266522 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தகவல் தரும்படி மிஹிந்தலை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குருநாகல் மல்லவபிட்டியில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு…!!
Next post மருதானையை சேர்ந்த பெண்ணுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை..!!