விறகு வெட்டிக் கொண்டிருந்த பாட்டியின் அருகில் சென்ற குழந்தை பரிதாபமாக பலி…!!
Read Time:1 Minute, 3 Second
மஹியங்கன – தியகோமல பிரதேசத்தில் கோடரி தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
தனது பாட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த குழந்தை அந்தப் பக்கம் சென்றுள்ளது.
இதன்போது குழந்தையின் தலையில் கோடரி தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த குழந்தை பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் சிகிச்சை பலனளிக்காது அங்கு குறித்த குழந்தை பலியாகியுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மஹியங்கன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating