தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேரை சுட்டுக்கொன்ற சீன பாதுகாப்பு படை…!!
சீனாவின் சின்சியாங் மாகாணத்தின் கிழக்குப்பகுதியில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் குழந்தைகள், பெண்கள் உட்பட 17 பேரை சீன பாதுகாப்பு படை சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் கடந்த 3 வருடங்களாக நிலக்கரி சுரங்கத்தில் பல்வேறு தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் ஒன்றில் 50 பேர் பலியாகினர். இந்த தாக்குதலில் ஈடுபடுபவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று சீனா சந்தேகிக்கிறது. மேலும் சமீபத்தில் உலகையே உலுக்கிய பாரிஸ் தாக்குதலையடுத்து சர்வதேச நாடுகளிடம் சின்சியாங் தீவிரவாதிகளை ஒடுக்க உதவி கோரியது.
இந்நிலையில், தீவிரவாதிகளை ஒடுக்கும் முயற்சியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 17 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் இது குறித்து கருத்து தெரிவிக்க சீனா மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating