வெடிகுண்டு மிரட்டல் எதிரொலி: எகிப்து சென்ற விமானம் பல்கேரியாவில் அவசர தரையிறக்கம்…!!
Read Time:1 Minute, 4 Second
போலந்தில் இருந்து எகிப்து நோக்கி சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததையடுத்து அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
161 பயணிகளுடன் சென்ற அந்த விமானம் போலந்து தலைநகர் வார்சாவில் இருந்து இன்று காலையில் புறப்பட்டது. பல்கேரியா வான்பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த ஒரு பயணியிடம் வெடிபொருட்கள் இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, பர்காஸ் விமான நிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். வெடிபொருட்கள் வைத்திருந்ததாக கூறப்படும் சுமார் 60 வயதுடைய பயணியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating