சிறுமி பாலியல் புகார்: 5 தனிப்படையினர் சிவகங்கையில் விசாரணை…!!
சிவகங்கையை சேர்ந்த சிறுமி பாலியல் பலாத்காரம் தொடர்பாக அவரது தந்தை முத்துப்பாண்டி, சகோதரர் கார்த்திக், போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சங்கர் உள்பட 10 பேர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களில் கார்த்திக் ஜாமீன் பெற்றுள்ளார். மற்ற அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 8 பேருக்கு மருத்துவ பரிசோதனை முடிந்துள்ளது. இதற்கிடையில் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் சி.பி. சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளராக தற்போது பொறுப்பேற்றுள்ள அம்ரித்சிங், இந்த வழக்கை விசாரித்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் சிவகங்கை வந்து விசாரணை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஒரு மாதத்துக்குள் வழக்கை முடிக்க திட்டமிட்டு, இன்ஸ்பெக்டர்கள் சேகர் ஜெனோவா, ராதிகா உள்ளிட்டோர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Average Rating