மொனராகலையில் இரு மாணவிகள் ஆசியரால் துஷ்பிரயோகம் ; எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் : பொலிஸார் மீது தாக்குதல்..!!

Read Time:3 Minute, 3 Second

Delhi-gang-rapeமொன­ரா­கலை பிர­தேச பாட­சாலை ஒன்றில் கல்வி கற்கும் மாண­விகள் இரு­வரை துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­ய­தாக கூறப்­படும் குறித்த பாட­சா­லையின் ஆசி­ரியர் ஒரு­வரை பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

நேற்று முன்­தினம் இடம்­பெற்ற இச்­சம்­ப­வத்­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து குறித்த பாட­சா­லைக்கு முன்­பாக ஆர்ப்­பாட்­ட­மொன்று இடம்­பெற்­றுள்­ள­துடன் அசா­தா­ரண நிலை ஏற்­பட்­டுள்­ளது.

இந்த சந்­தர்ப்­பத்தில் சம்­பவ இடத்­துக்கு வருகை தந்­தி­ருந்த பொலி­ஸாரின் வாக­னத்தின் மீது ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் கல் வீசி தாக்­குதல் நடத்­தி­யுள்­ளனர்.

மேலும் இந்த ஆசி­ரி­யரை பணி நீக்கம் செய்­வ­தற்கு தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக ஊவா மாகாண முத­ல­மைச்சர் சாமர சம்பத் தச­நா­யக்க தெரி­வித்தார்.

குறித்த ஆசி­ரியர் மாண­வி­க­ளுக்கு கைய­டக்க தொலை­பே­சி­களை பெற்றுக் கொடுத்­துள்­ள­துடன் அவற்­றுக்கு பாலியல் உணர்­வு­களை தூண்டும் வகையில் குறுந்­த­க­வல்­களை அனுப்­பி­யுள்­ள­தோடு அம் மாண­வி­களை துஷ்­பி­ர­யோகம் செய்­துள்­ள­தாக குற்றஞ் சாட்­டப்­பட்­டுள்ளார்.

12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மேற்­படி இரண்டு மாண­வி­களே இவ்­வாறு துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உள்­ளா­கி­யுள்­ளனர்.

மேலும் இச்­சம்­பவம் தொடர்பில் முறை­யான விசா­ர­ணை­யொன்­றினை மேற்­கொள்­ளு­மாறு ஊவா மாகாண முத­ல­மைச்சர் மாகாண கல்வி செய­லா­ள­ருக்கு பணிப்­பு­ரை­யொன்­றினை விடுத்­துள்ளார்.

மேலும் அங்கு கூடி­யி­ருந்து அனை­வரும் ஆர­வாரம் செய்து கூச்­ச­லிட்­டுள்­ளனர் எனவும் இவற்­றுக்­கி­டையில் ஆசி­ரியர் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இத­னி­டையே மேலும் சிலர் குறித்த ஆசி­ரியர் மீது தாக்­குதல் நடத்­து­வ­தற்கு தயா­ரான நிலையில் இருந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியர் இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு சம்பவமொன்றில் ஈடுபட்டதற்காக இடம்மாற்றம் செய்யப்பட்டு இந்த பாடசாலைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முகம் மாற்று சத்திரசிகிச்சைக்குள்ளான முன்னாள் தீயணைப்பு வீரர் சிறப்பான முறையில் குணமடைகிறார்..!!
Next post மோதலில் ஒருவர் உயிரிழப்பு…!!