மொனராகலையில் இரு மாணவிகள் ஆசியரால் துஷ்பிரயோகம் ; எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம் : பொலிஸார் மீது தாக்குதல்..!!
மொனராகலை பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவிகள் இருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறப்படும் குறித்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று முன்தினம் இடம்பெற்ற இச்சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றுள்ளதுடன் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் சம்பவ இடத்துக்கு வருகை தந்திருந்த பொலிஸாரின் வாகனத்தின் மீது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் இந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.
குறித்த ஆசிரியர் மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசிகளை பெற்றுக் கொடுத்துள்ளதுடன் அவற்றுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் குறுந்தகவல்களை அனுப்பியுள்ளதோடு அம் மாணவிகளை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குற்றஞ் சாட்டப்பட்டுள்ளார்.
12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மேற்படி இரண்டு மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணையொன்றினை மேற்கொள்ளுமாறு ஊவா மாகாண முதலமைச்சர் மாகாண கல்வி செயலாளருக்கு பணிப்புரையொன்றினை விடுத்துள்ளார்.
மேலும் அங்கு கூடியிருந்து அனைவரும் ஆரவாரம் செய்து கூச்சலிட்டுள்ளனர் எனவும் இவற்றுக்கிடையில் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே மேலும் சிலர் குறித்த ஆசிரியர் மீது தாக்குதல் நடத்துவதற்கு தயாரான நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட ஆசிரியர் இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு சம்பவமொன்றில் ஈடுபட்டதற்காக இடம்மாற்றம் செய்யப்பட்டு இந்த பாடசாலைக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating