பாடசாலை மாணவனின் சடலம் மீட்பு…!!
Read Time:1 Minute, 15 Second
எம்பிலிபிட்டிய – பணாமுர பிரதேசத்தில் 13 வயது பாடசாலை மாணவனின் சடலம், கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சத்துர மதுசங்க என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பாடசாலை பரீட்சைக்கு தோற்றிய அந்த மாணவன் பரீட்சை முடிந்து மாலை வரை வீடு திரும்பாத காரணத்தால் அவரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அயலவர்கள் இணைந்து இரவு வரை அந்த மாணவனை தேடியுள்ளனர்.
பின்னர் அவரின் சடலம் பாழடைந்த கிணறு ஒன்றில் காணப்பட்டது.
எம்பிலிபட்டிய நீதவான் மற்றும் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
எம்பிலிபிட்டிய பொது மருத்துவ மனையில் பிரேத பரிசோதணை செய்த போது அவர் கொலை செய்யப்பட்டமை உறுதியானது.
கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை பணாமுர காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating