திருமண நிகழ்விற்கு சென்றவர் மீது துப்பாக்கிச் சூடு..!!
Read Time:1 Minute, 3 Second
மீட்டியாகொடை, கொலேவத்தை பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் திருமண நிகழ்வொன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வழியில் சுட்டுக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 32 வயதுடைய ஹிக்கடுவை, உடுமுல்லை பிரதேசத்தில் வசிக்க கூடியவர் என்றும், உயிரிழந்தவரின் சடலம் கராப்பிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் தொடர்பில் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று மீட்டியாகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Average Rating