முன்னாள் பிரதி அமைச்சருக்கு பிணை…!!
Read Time:1 Minute, 2 Second
முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்னவை பிணையில் விடுதலை செய்ய நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு நகரசபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது, கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியதாக முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமார குணரத்ன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்படி நீதிமன்ற அழைப்பின் பேரில் அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.
Average Rating