உடல்நிலை பாதிக்கப்பட்ட அம்மாவின் 5 குழந்தைகளுக்கு தமது பணிநேரத்தில் சமைத்துக் கொடுத்த போலீஸ்காரர்கள்…!!

Read Time:1 Minute, 29 Second

eb7c267a-aa75-4111-bc07-3dee5587212e_S_secvpfநெதர்லாந்து நாட்டின் இந்தோவென் பகுதியில், அவசர உதவி தேவைப்பட்ட ஒரு வீட்டிற்கு மருத்துவக் குழுவுடன் இரு போலீசார் விரைந்தனர்.

குறிப்பிட்ட வீட்டில், இருந்த பெண்மணிக்கு உடலில் ரத்தத்தில் இருக்க வேண்டிய சர்க்கரையின் அளவு, அபாயகரமான அளவுக்கு குறைந்திருந்தது. இதையடுத்து, மருத்துவக்குழுவினர் அந்தப் பெண்மணியை உடனடியாக அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் அந்தப் பெண்மணியின் ஐந்து குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பதை உணர்ந்த போலீசார், உணவு வேளையை உணர்ந்து அவர்களுக்கு வறுத்த முட்டையும், சாண்ட்விச்சையும் சமைத்து கொடுத்தனர். இறுதியாக அந்த பெண்மணியின் பிள்ளைகளைப் கவனித்துக்கொள்ள உகந்த நபர்களை அமர்த்திவிட்டு தமது பணிக்கு திரும்பினர்.

இந்தப் போலீஸ்காரர்களின் பொறுப்பான செயல், இணைய உலகத்தினரிடம் அவர்களுக்கு பெரும் வரவேற்பையும், பாராட்டையும் பெற்றுத்தந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் சுட்டிக் குழந்தை வெறும் 40 நொடியில் நித்திரையடைய வேண்டுமா?
Next post மூத்த புகைப்பட ஊடகவியலாளர் இறுதிக் கிரியை இன்று..!!