மூத்த புகைப்பட ஊடகவியலாளர் இறுதிக் கிரியை இன்று..!!

Read Time:1 Minute, 31 Second

timthumbமூத்த புகைப்பட ஊடகவியலாளர் கதிரவேல் ஐயாவின் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றது. யாழ். அளவெட்டி பகுதியிலுள்ள அவரது இல்லத்தில் இன்று வெள்ளிக்கிழமை 2.00 மணியளவில் இறுதிக் கிரிஜைகள் இடம்பெற்றன. தனது 84 ஆவது வயதில் நேற்று வியாழக்கிழமை கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து அகால மரணமானார். கிணற்றுக்குள் தவறி விழுந்த அவரை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

ஊடகத்துறையில் 35 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிய கதிரவேல் ஐயா தமிழராட்சி மாநாட்டு படுகொலை, மாவிட்டபுர ஆலய உட்பிரவேச போராட்டம் போன்ற பல நெருக்கடி சமயங்களிலும் கூட சிறந்த புகைப்பட ஊடகவியலாளராக செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸாரின் தாக்குதலால் தனது ஒற்றைக்கண்ணின் பார்வையையும் இழந்த நிலையிலும் அவரது ஊடகப் பணி தொடர்ந்ததுடன் ஊடகத்துறையில் அவரது பங்களிப்புக்காக 2012ஆம் ஆண்டு கலாபூசணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல்நிலை பாதிக்கப்பட்ட அம்மாவின் 5 குழந்தைகளுக்கு தமது பணிநேரத்தில் சமைத்துக் கொடுத்த போலீஸ்காரர்கள்…!!
Next post தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு…!!