வடக்கு மாகாண பாடசாலைகள் நாளை நடைபெறும்..!!

Read Time:1 Minute, 15 Second

downloadவடக்கு மாகாணத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடந்த 16 ஆம் திகதி மூடப்பட்ட பாடசாலைகளுக்கான பதில் பாடசாலைகள், நாளை சனிக்கிழமை (21) நடைபெறவுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.ரவீந்திரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை அதிபர் தெரிவுக்கான பரீட்சையும் நடைபெறவுள்ளதால் நாளை பதில் பாடசாலையை நடத்த முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியிருந்தது. இதனால் பாடசாலை நடைபெறுமா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.

இக்குழப்பத்துக்கு தீர்வு காணும் வகையில், அதிபர் பரீட்சைகள் நடைபெறும் பாடசாலைகள் தவிர்ந்த மிகுதி அனைத்துப் பாடசாலைகளும் நாளை பதில் பாடசாலைக்காக திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு…!!
Next post கேஸ் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு…!!