யாழில் புகையிரதம் மோதி காரில் பயணித்த இருவர் ஸ்தலத்தில் பலி, இருவர் படுகாயம்..!!
Read Time:1 Minute, 16 Second
கொழும்பில் இருந்து வந்த புகையிரதம் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகில் கச்சேரி நல்லூர் வீதியில் உள்ள புகையிரத கடவையைத் தாண்டும் போது இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
கச்சேரி நல்லூர் வீதியால் வந்துகொண்டிருந்த கார் புகையிரத கடவையில் இருந்த புகையிரதம் வருகிறது என்கின்ற சமிஞ்ஞையை அவதானிக்காமல் கடக்க முயன்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காரில் பயணித்த நால்வரில் இருவர் மரணமடைந்துள்ள நிலையில் இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி யாழ் போதனாவைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மரணமடைந்தவர்களில் ஒருவர் பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்கு உள்ளான கார் கச்சேரி நல்லூர் வீதியில் இருந்து இழுத்துச் செல்லப்பட்டு சோமசுந்தரம் அவென்னியு கடவையில் வீசப்பட்டுள்ளது.
Average Rating