28 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணம் கடத்த முற்பட்ட பெண்..!!

Read Time:1 Minute, 33 Second

1145532711Kattunayakaசட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயத் தாள்களை நாட்டில் இருந்து கடத்திச் செல்ல முற்பட்ட பெண்ணொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை 12.45 மணியளவில் டி.ஜி.308 என்ற விமானத்தில் பெங்கொக் நோக்கி செல்ல முற்பட்ட வேளை குறித்த பெண் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பிரிவு ஊடகப் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் பயணப் பெட்டியில் இருந்து அமெரிக்க டொலர்கள், சுவிஸ் பிரேங், சவூதி ரியால், யூரோ, இஸ்ரேலிங் பவுன் போன்ற வெளிநாட்டு நாணயத்தாள்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன.

அவற்றின் இலங்கைப் பெறுமதி 2 கோடியே 80 இலட்சத்து 57,645 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

கடுவலை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்படுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சமந்தா இன்று இலங்கை வருகிறார்…!!
Next post திருகோணமலை கடற்கரையில் சடலம்..!!