கிளிநொச்சி:இனந்தெரியாத நபர் தாக்குதல்..!!
கிளிநொச்சி கோரக்கன் கட்டு வை.எம்.சீ.ஏ குடியிருப்பு பகுதியிலுள்ள பொதுமக்கள் மீது இனந்தெரியாத நபர் ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். வை.எம்.சீ.ஏ குடியிருப்பு பகுதிக்குள் நள்ளிரவு வேளையில் இனந்தெரியாத நபர் ஒருவரின் நடமாட்டம் சில தினங்களாக இருந்துள்ளது. இந்த நிலையில் குடியிருப்பு மக்கள் குறித்த நபரை வழிமறித்து விசாரிக்க முற்பட்ட போது, அவர் பொதுமக்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த நபர் தப்பிச் சென்றதன் பின்னர், இன்றைய தினம் அதிகாலை 1.30 அளவில் குடியிருப்பு பகுதிக்குள் 3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் வாள்கள், கம்பிகளுடன் நுழைந்துள்ளதாக அப்பிரதேச மக்கள் குறிப்பிட்டனர். இவ்வாறு நுழைந்தவர்கள் மக்களின் வீடுகளுக்குள்ளும் நுழைய முற்பட்ட நிலையில் பொதுமக்கள் குறித்த கொள்ளைக் கும்பலை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றுள்ளனர். இதன்போது, 2 பேர் தப்பிச் சென்ற நிலையில் 4 பேர் மக்களிடம் பிடிபட்டனர்.
இந்த நிலையில் பிடிக்கப்பட்டவர்களிடமிருந்து வாள்கள், கம்பிகளை பிடுங்கிக் கொண்ட மக்கள் அவர்களை கட்டிவைத்து நையப்புடைத்ததன் பின்னர் இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில ஒப்படைத்தனர். குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating