சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் தீ விபத்து: 21 பேர் பலி…!!
Read Time:1 Minute, 6 Second
சீனாவில் வடகிழக்கு பகுதியில் உள்ள ஹெய்லாங்ஜியாங் மாகாணம், ஜிக்ஸி நகரத்தில் அரசுக்கு சொந்தமான நிலக்கரி சுரங்கம் ஒன்று உள்ளது. இந்த நிலக்கரி சுரங்கத்தில் நேற்று இரவு 38 ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், ஊழியர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறினர்.
இருப்பினும் இவ்விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 16 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். ஒருவரை காணவில்லை. அவரை மீட்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுரங்கத்தில் தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Average Rating