பண மோசடி தகராறு: மேலாளரை தாக்கிய முதலாளி கைது…!!
Read Time:1 Minute, 5 Second
கோயம்பேடு நெற்குன்றம் முனியப்பா நகரை சேர்ந்தவர் மாரிமுத்து (30). இவர் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் அசோக் நகரை சேர்ந்த கார்மேகம் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் கணக்குகளை சரி பார்த்த போது ரூ.8 லட்சம் குறைந்தது. இது குறித்து மாரிமுத்து கார்மேகத்திடம் கேட்டார். அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மாரிமுத்து இரும்பு கம்பியால் கார்மேகத்தை தாக்கினார். ரத்த வெள்ளத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். உடனே மாரிமுத்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குபதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.
Average Rating