அரைநிர்வாண நிலையில் இளம்பெண் கொலை: புகைப்படம் வெளியிட்டு போலீசார் விசாரணை…!!

Read Time:4 Minute, 53 Second

386e3143-a6ec-46c5-9ada-18688fb140e1_S_secvpfகோவை பீளமேடு அருகே உள்ள கோல்டு வின்ஸ் டாஸ்கன்நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வீட்டில் கடந்த 2½ மாதங்களுக்கு முன்பு நாமக்கல் ராசிபுரத்தை அடுத்த மெட்டாலா பகுதியை சேர்ந்த செல்வம் (வயது 35) என்பவர் வாடகைக்கு குடிவந்தார்.

செல்வம் பீளமேடு பகுதியில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. எனினும் குடும்பத்தினர் நாமக்கல்லியே வசித்து வந்தனர். செல்வம் மட்டும் இங்கு தனியாக தங்கினார்.

நேற்று முன்தினம் இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் வீட்டு உரிமையாயாளர் செல்வராஜின் மகன் விஜய் அங்கு சென்றார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பூட்டிக் கிடந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, அங்கு ஒரு இளம்பெண் அரை நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பீளமேடு போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பெண் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் வாயில் துணி வைத்து அமுக்கப்பட்டிருந்தது. அவரது மர்ம உறுப்பு தாக்கப்பட்ட நிலையில் இருந்தது. கடந்த 16–ந் தேதி விஜய், வாடகை வாங்குவதற்காக செல்வத்தின் வீட்டுக்கு சென்ற போது அங்கு இந்த பெண்ணை பார்த்துள்ளார். அப்போது, நீங்கள் தனியாக வசிப்பதாக கூறினீர்கள்? இந்த பெண் யார்? என விஜய் கேட்டுள்ளார். அதற்கு செல்வம் ‘வாடகை வாங்க வந்தால் அதை வாங்கி விட்டு போ’ என பதில் கூறி பணத்தை கொடுத்துள்ளார்.

இந்தநிலையில், அந்த பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டு இருப்பதும், செல்வம் தலைமறைவானதும் போலீசாருக்கு அவர் மீது சந்தேகத்தை வரவழைத்தது.

தலைமறைவான செல்வத்தை தேடி போலீசார் நாமக்கலுக்கு சென்ற போது அங்கு அவர் இல்லை. செல்போன் அழைப்புகள் பட்டியல் சேகரித்து விசாரித்த போது அவர் பெருந்துறையில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அவர் செல்போனை அணைத்து விட்டு மாயமாகி விட்டார். எனவே போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், கொலை செய்யப்பட்ட பெண் செல்வத்தின் கள்ளக்காதலியாக இருக்கலாம் என கருதிய போலீசார் அவர் யார்? என விசாரித்து வந்தனர்.

இதற்கிடையே, கொலை நடந்த வீட்டில் போலீசார் சோதனை நடத்திய போது அங்கு பெண்கள் பயன்படுத்தும் கைப்பை இருந்தது. அதில் பெண்களின் முக அழகு சாதனங்கள் மற்றும் ஒரு மெமரி கார்டு இருந்தது. அதை செல்போனில் போட்டு பார்த்த போது அதில் இளம் பெண்ணின் புகைப்படங்கள் இருந்தது. அந்த புகைப்படங்களை பார்த்த விஜய் இந்த பெண் தான் செல்வத்துடன் இருந்த பெண் என்பதை உறுதிபடுத்தினார்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட பெண் யார்? என கண்டுபிடிப்பதற்காக அவரது புகைப்படத்தை வெளியிட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புகைப்படம் கோவை மாநகரில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பக்கத்து மாவட்ட போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பூரில் இளம்பெண்ணுக்கு 2 பேர் போட்டி: டெய்லருக்கு கத்திக்குத்து…!!
Next post பிறந்த ஆண் குழந்தையை ஜன்னல் வழியே வீசி எறிந்த தாய்: கொட்டும் மழையில் நடந்த கொடூரம்…!!