வெள்ள நீர் நிரம்பிய பள்ளத்தில் விழுந்து ஒரு வயதுக் குழந்தை பலி –களுவன்கேணியில் சம்பவம்..!!

Read Time:1 Minute, 32 Second

DSC09941மட்டக்களப்பு, ஏறாவூர்ப் பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள களுவன்கேணியில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற சம்பவத்தில் ஒரு வயதுக் குழந்தை சமீபத்தில் பெய்த வெள்ள நீர் நிரம்பியிருந்த பள்ளத்தினுள் விழுந்து மரணமடைந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் களுவன்கேணியசை; சேர்ந்த கங்காதரன் கடாலினி என்ற குழந்தையே மரணித்துள்ளது.

குழந்தையின் தாய் வீட்டில் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தபோது குழந்தை வீட்டின் பின்புறமாக நகர்ந்து சென்று இந்த நீர் நிரம்பிய பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

சற்று நேரத்தில் அதாய் குழந்தையைத் தேடிச் சென்ற போது குழந்தை நீரில் மூழ்கிக் கிடந்துள்ளது.

தாய் குழந்தையை மீட்டு உடனடியாக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் எடுத்து வந்தபோதும் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டிருந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் பற்றி ஏறாவூர் பொலிஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்லாமியர் என்றாலே தீவிரவாதியா? என்னை நம்பினால் கட்டியணையுங்கள்: மக்களிடம் கேட்ட நபர் (வீடியோ இணைப்பு)..!!
Next post குழந்தை பராமரிப்புக்காக மனைவி இல்லாத ஆண் ஊழியர்களுக்கு 2 ஆண்டு விடுமுறை…!!