வடமாகாணத்தில் பலரை சந்தித்தார் சமந்தா பவர்…!!

Read Time:1 Minute, 58 Second

DSCF8460இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவர் மற்றும் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் விஷேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றுள்ளது.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று மாலை நாட்டிற்கு வருகை தந்துள்ள சமந்தா பவர் வெளிவிவாகார அமைச்சர் மங்கள சமரவீரவை சந்தித்து கலந்துரையாடல்களை நடாத்தியிருந்தார்.

இந்த நிலையில் இன்று வட மாகாணத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்த சமந்தா பவர், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ்.பலிஹக்கார உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் யு எஸ். எய்ட் இனால் நிர்மானிக்கப்பட்ட ஒஸ்மானியா கல்லூரியின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் அவர் பகல் கலந்து கொள்ளவுள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சமந்தா பவர் ஆகியோருக்கு இடையில் இன்று விஷேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடாவில் குடியேற கடுமையான போராட்டங்களை சந்தித்த கர்ப்பிணி பெண்: இரக்கம் காட்ட மறுத்த அதிகாரிகள்…!!
Next post மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடியில் வாகன விபத்து ஒருவர் பலி..!!