மின்சார மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கலாம்…!!
Read Time:1 Minute, 7 Second
அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தகவல் தொடர்பாடல் மற்றும் மின்சார விநியோக சேவைத்துறைக்கான புதிய வரிவிதிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதனால் மின்சார கட்டணம் மற்றும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் என்பன அதிகரிக்கக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
தொடர்பாடல் சேவை மற்றும் மின்சார விநியோக சேவைகளுக்காக 4 சதவீத வரிவிதிப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வரவு செலுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்காரணமாக அடுத்த வருடம் ஜனவரி முதல் மின்சாரம் மற்றும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக, வரிகள் தொடர்பான சட்டத்தரணி சுரேஷ் பெரேரா தெரிவித்துள்ளார்.
Average Rating