மீண்டும் நடிக்க வந்த காரணம் என்ன? மனம் திறந்த விஜயகாந்த் ..!!
Read Time:1 Minute, 20 Second
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசனுக்கு இணையாக நடித்து புகழ் பெற்றவர் விஜயகாந்த்.கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்பட்ட இவர் அரசியலுக்கு சென்ற பின் நடிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக தவிர்த்தார்.கடைசியாக சகாப்தம் படத்தில் மகனுக்காக ஒரு காட்சியில் தோன்றி நடித்தார்.
தற்போது மீண்டும் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயகாந்த் தனது மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் தமிழன் என்று சொல் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கேப்டன், தமிழ் மொழிக்கான படம் என்பதாலும், தமிழன் என்பதாலும் தான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார்.மேலும் மகனை வளர்த்து விடுவதற்கு துணையாக இருப்பதற்காக நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Average Rating