ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்த இந்தியர் துபாயில் அதிரடி கைது..!!
ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்து வந்த கர்நாடகத்தைச் சேர்ந்த நபர் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் பத்கல் நகரைச் சேர்ந்த அட்னான் தமுடி என்ற அந்த நபர் 2012ம் ஆண்டு துபாய்க்கு இடம் பெயர்ந்து, அங்கு அக்கவுண்டன்ட் ஆக வேலை பார்த்து வந்துள்ளார்.
அவரது செயல்பாடுகள் இந்திய உளவுத்துறையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் அவரை கண்காணிக்குமாறு துபாய் பொலிசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
அவரது சமூக வலைதளங்கள் கண்காணிக்கப்பட்டபோது, அதில் அவர் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வந்ததும், இந்தியர்களுக்கு ஆசை வார்த்தை கூறி ஐ.எஸ் அமைப்புக்கு ஆள் சேர்த்ததும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து தற்போது அட்னான் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது இவரை இந்தியாவுக்கு நாடு கடத்திக் கொண்டு வர இந்திய உளவுத்துறையினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இவர் இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட்டால் முக்கியத் தகவல்கள் நமக்குத் தெரிய வரும் என கூறப்படுகிறது.
Average Rating