கேமரூனில் மனித வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் சாவு…!!
Read Time:1 Minute, 0 Second
ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, நைஜர், சாத், கேமரூன் உள்ளிட்டவற்றில் போகோஹரம் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். அவ்வப்போது அவர்கள் தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கேமரூனில் போட்டோகோல் நகர் அருகேயுள்ள நிக்யு என்ற கிராமத்தில் 3 பெண் தீவிரவாதிகள், ஒரு ஆண் தீவிரவாதி என 4 பேர் தங்கள் உடல்களில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை நேற்று வெடிக்கச் செய்தனர். இதில் அவர்கள் உடல் சிதறி பலியாகினர்.
இந்த தாக்குதலில் சிக்கி அப்பாவி கிராம மக்கள் 4 பேரும் உடல் சிதறி உயிரிழந்தனர். இந்த சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating