புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை: சந்தேகநபர்கள் சார்பான சட்டத்தரணி ஆஜராகவில்லை.. ஏன்? (படங்கள் & வீடியோ)
Read Time:1 Minute, 9 Second
வித்தியா சந்தேக நபர்கள் சார்பாக சட்டத்தரணி ஆஜராகாத காரணத்தினால் வழக்கு விரைவாக நிறைவடைந்தது.
இன்றைய தினம் புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இதன் போது பாதிக்கப்பட்டவர்கள் அதாவது புங்குடுதீவு மாணவி வித்தியா சார்பாக சட்டத்தரணி சுனந்த தேசப்பிரிய மற்றும் மணிவண்ணன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
ஆனால் வழமையாக சுவிஸ்குமார், அவரது தம்பி, மச்சான் ஆகிய மூவர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணி சரத் வல்கமுவ நீதிமன்றி இன்று ஆஜராகவில்லை.
இதன் காரணமாக ஊர்காவற்றுறை நீதிவான் எஸ்.லெனின்குமார் குறித்த வழக்கை விரைவாக நிறைவு செய்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை ஒத்தி வைத்தார்.
அதிரடிக்கு மிக்க நன்றி.
Average Rating