புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை: சந்தேகநபர்களின் மரபணு பரிசோதனை அறிக்கை விரைவில்…!! (படங்கள் & வீடியோ)
Read Time:1 Minute, 7 Second
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை சந்தேக நபர்களின் மரபணு பரிசோதனை அறிக்கை விரைவில் வெளிவரவுள்ளது.
இவ்விடயத்தை ஜின்டெக் எனும் நிறுவனமே தற்போது கையாளுகின்றது.
தற்போது இந்நிறுவன உயர் அதிகாரி ஒருவர் எமது “அதிரடி” செய்தியாளரிடம் “எதிர்வரும் சில நாட்களில் அதன் முடிவுகள் நீதிமன்றில் ஒப்படைக்க உள்ளதாக” தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய வழக்கு விசாரணையின் போது வித்தியா சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணி ஆஜராகாத காரணத்தினால் வழக்கு விரைவாக நிறைவடைந்தது.
இதன் காரணமாக ஊர்காவற்றுறை நீதிவான் எஸ்.லெனின்குமார் குறித்த வழக்கை விரைவாக நிறைவு செய்து, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி வரை ஒத்தி வைத்தார்.
நன்றி அதிரடி.
Average Rating