தோழியின் கர்ப்பப்பையை வெட்டி எடுத்த கொடூர பெண்…!!
அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனது தோழியின் கர்ப்பப்பையை வெட்டி எடுத்துள்ள கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயோர்க் நகரின் பிரான்க்ஸ் பகுதியில் உள்ள வேக்பீல்ட் ஏரியா குடியிருப்பில் வசித்து வந்த அஷ்லீக் வேட்(22) என்ற பெண்மணி, சம்பவம் நடைபெற்ற அன்று, நிறைமாத கர்ப்பிணியான தனது குழந்தைப்பருவ தோழி ஏஞ்ஜலிக்கை தான் வசிக்கும் குடியிருப்பிற்கு அழைத்துள்ளார்.
பின்னர், கத்தியை வைத்து கர்ப்பிணி தோழியின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுத்துள்ளார், வலி தாங்க முடியாத தோழி அலறிய சத்தம் கேட்டு அருகில் வசித்தவர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது படுக்கையறையில் கர்ப்பிணி பெண் ரத்தவெள்ளத்தில் கிடந்துள்ளார், அருகில் உள்ள அறையில் தொப்புள்கொடியும், குளியலறைக்கு அருகே கத்தியும் கிடந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பெண்ணை கைது செய்த பொலிசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், அப்பெண் அது என்னுடைய குழந்தை என்று அலறியுள்ளார், மேலும், இவர் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங்கில் தன் வயிற்றில் குழந்தை இருப்பதை போன்ற புகைப்படத்தையும் சில நாட்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் பதிவுட்டுள்ளார்.
தற்போது, கர்ப்பிணி தோழி உயிரிழந்துவிட்ட நிலையில், அக்குழந்தைக்கு இப்பெண் உரிமை கொண்டாடி வருகிறார், ஆனால் பொலிசாரோ அக்குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும், அஷ்லீக்கிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் பொலிசார், அவரை மனநல பகுப்பாய்வுக்கும் உட்படுத்தியுள்ளனர்.
Average Rating