வவுனியாவில் யன்னல் வழியாக சூட்சுமான முறையில் திருட்டு…!!
Read Time:1 Minute, 13 Second
வவுனியா, தோணிக்கல், லக்ஸபானா வீதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்றிரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, தோணிக்கல், லக்ஸபானா வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசிப்பவர்கள் நேற்று இரவு உறங்கிய பின் ஜன்னல் வழியாக வீட்டு அறையில் இருந்த கைப்பையை எடுத்து அதில் இருந்த 6,000 ரூபாய் பணத்தையும், சுமார் ஒரு இலட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நகைகளையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, வவுனியாவில் அண்மைக்காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating