18 வயதான பாடசாலை மாணவி நபரொருவரால் கடத்தல்…!!

Read Time:1 Minute, 27 Second

downloadஅனுராதபுரம் நகரத்தில் 18 வயதான பாடசாலை மாணவியொருவர் , 35 வயதான திருமணமான நபரால் இன்று காலை கடத்திச்செல்லப்பட்டுள்ளார்.

அவருடைய நண்பிகளோடு மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது இவர் கடத்தப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர் குறித்த பெண்ணை தாக்கி பலவந்தமாக முச்சக்கரவண்டியில் அழைத்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன் போது குறித்த மாணவியின் நண்பிகளால் முச்சக்கரவண்டியில் இலக்கம் குறிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில் முச்சக்கரவண்டியை பொலிஸார் கண்டுபிடித்ததுடன் , அதன் சாரதியிடம் மேற்கொண்ட விசாரனையின் போது முச்சக்கரவண்டியில் இருந்த அந்த மாணவியை வெஸ்ஸகிரிய பிரதேசத்தில் வைத்து இருசக்கரவாகனத்தில் ஏற்றி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குறித்த மாணவியை கடத்திய நபர் அனுராதபுரம் இரண்டாம் கட்டை பகுதியை சேர்ந்தவராவார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அழுகிய நிலையில் வீட்டு முன்பாக கிடந்த குழந்தையின் சடலம்…!!
Next post NO சொன்ன VIJAY TV, YES சொன்ன TAMIL CINEMA…!!