விபசார தொழிலில் குதித்த ஆடை வடிவமைப்பாளர்: திருச்சியில் பிடிபட்ட அழகியின் சோக கதை…!!

Read Time:3 Minute, 1 Second

fd3e1b65-294f-4179-89b2-bd71e1bc037c_S_secvpfதிருச்சி கே.கே.நகர் ரெங்கா நகர் 49–வது குறுக்குத்தெருவில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக, திருச்சி விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்–இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் அங்கு சென்று வீட்டை சோதனையிட்டனர்.

அப்போது அங்கு விபசார தொழில் நடத்திய நாமக்கல் மாவட்டம் பனந்தோப்பு பகுதியை சேர்ந்த தமிழ்செல்வி (வயது 34), அவருக்கு உதவியாக இருந்த திருச்சி மேல சிந்தாமணியை சேர்ந்த சசிக்குமார் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களால் விபசார தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட திருவண்ணாமலையை சேர்ந்த சாந்தி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை போலீசார் மீட்டனர். போலீசாரிடம் சாந்தி தான் விபச்சார தொழிலுக்கு வந்தது எப்படி என சோக கதையை கூறினார்.

சாந்திக்கு தாய்–தந்தை கிடையாது. திருமணமான அக்காவுக்கும் விவாகரத்து ஏற்பட்டு விட்டது. டெய்லரிங் தொழில் செய்து தனது அக்கா மற்றும் அவரது குழந்தைகளை காப்பாற்றினார். இந்நிலையில் சாந்திக்கு ஏற்பட்ட விபத்தில் தலையில் அடிபட்டது. இதனால் கண் பார்வை பாதித்தது. டெய்லர் தொழிலும் செய்ய முடியவில்லை.

இந்த நிலையில் தோழி ஒருவர் மூலமாக விபச்சார தொழில் செய்து வந்த தமிழ்செல்வியுடன் பழக்கம் ஏற்பட்டது. அதில் பணம் குவிந்ததால் அதிலேயே முழு நேரமும் இறங்கி விட்டதாக சாந்தி போலீசில் கூறியுள்ளார்.

கைதான புரோக்கர் சசிக்குமார், விலை உயர்ந்த நாய்களை வாங்கி விற்கும் தொழில் செய்துள்ளார். ஒரு முறை இவர்களிடம் வாடிக்கையாளராக வந்துள்ளார். அதன் பிறகு விபசார தொழிலுக்கு ஆட்களை அழைத்து வரும் புரோக்கராக மாறி விட்டாராம். கே.கே.நகர் வீட்டை ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறோம் எனக்கூறி வாடகைக்கு எடுத்து விபசார தொழில் செய்து உள்ளனர். இரவில் ஆட்கள் வந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் சிக்கிக்கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் எபோலா: லைபீரியாவில் 15 வயது சிறுவன் பலி…!!
Next post பரமக்குடி அருகே பா.ஜனதா தலைவர் வெட்டிக்கொலை: மர்ம கும்பலுக்கு வலைவீச்சு…!!