தம்பியுடன் பலி: கூவம் ஆற்றில் மூழ்கிய பெண் உடல் மீட்பு…!!

Read Time:1 Minute, 16 Second

240244d5-4ed0-4d89-b2bd-9a8ef66c89c0_S_secvpfபெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் குமார். இவர் நேற்று முன்தினம் திருவேற்காடு அடுத்த செல்வ கணபதி நகரில் வசித்த அக்காள் விஜயலட்சுமியுடன் (54) மகன் திருமண அழைப்பிதழ் கொடுக்க சூரப்பட்டு சென்றார்.

இருவரும் கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மூழ்கிய காடுவெட்டி தரைப்பாலத்தை கடக்க முயன்றனர். நீரின் வேகத்தில் 2 பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை ஆவடி தீயணைப்பு வீரர்கள் படகு மூலம் தேடி வந்தனர். நேற்று மதியம் குமாரின் உடல் மீட்கப்பட்டது. விஜயலட்சுமியை இன்று 3–வது நாளாக தேடும் பணி நடந்தது.

இந்த நிலையில் காடு வெட்டி தரைப்பாலத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் உள்ள பள்ளிக்குப்பம் முட்புதரில் விஜயலட்சுமி உடல் சிக்கி இருப்பது தெரிந்தது. உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு வந்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மிஸ்டு காலில் காதலித்த தேனி பெண் கொலை: அழகாக இல்லாததால் தீர்த்து கட்டியது அம்பலம்…!!
Next post 10 ஆண்டுகளாக கேம் விளையாடிய பெண்! வீடியோ கேம் மையத்தில் இருந்து மீட்பு…!!