ஒரு வார காலமாக உணவின்றி உயிர்தப்பிய குழந்தை..!!

Read Time:2 Minute, 20 Second

13423toddlerதனது பாட்­டி­யுடன் வசித்த 15 மாத குழந்­தை­யொன்று பாட்டி இறந்த பின் சுமார் ஒரு வார காலம் உணவு எது­வு­மின்றி தனி­யாக உயிர்ப்­ பி­ழைத்­துள்­ளது.

பிறையர் ரோஸ் இனெய்சென் எனும் இக்­கு­ழந்­தையின் 28 வய­தான தாயார் ட்ரேஸி இனெய்சென், குற்­ற­மொன்­றுக்­காக சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டுள்ளார்.

இதனால் இக்­கு­ழந்தை தனது பாட்­டி­யுடன் வசித்­து­வந்­தது.

தனது தாயா­ருடன் தொலை­பே­சியில் உரை­யா­டு­வதன் மூலம் தனது தாய் மற்றும் குழந்­தையின் நிலையை ட்ரேஸி அறிந்­து­வந்தார்.

ஆனால், நவம்பர் 7 ஆம் திக­தி­யி­லி­ருந்து ட்ரேஸியின் தொலை­பேசி அழைப்­புக்கு தாயார் பதி­ல­ளிக்­காத நிலையில், தனது காதலர் அந்­தனி வால்­டோவை அழைத்த ட்ரேஸி, தனது வீட்­டுக்குச் சென்று பார்க்­கு­மாறு கோரி­னாராம்.

இதை­ய­டுத்து, கடந்த 14 ஆம் திகதி ட்ரேஸியின் வீட்­டுக்கு அந்­தனி வால்டோ சென்­ற­போது அவ்­வீட்டின் வெளிப்­பு­றக்­க­தவு தாழிட்­டி­ருந்­தது.

ஆனால், உட்புற கத­வொன்று திறந்­தி­ருப்­பதை ஜன்­ன­லுக்­கூ­டாக அவ­தா­னித்தார். குழந்­தை­யொன்று தனி­யாக அழு­து­கொண்டு இருப்­ப­தையும் அவர் அறிந்தார்.

அதன்பின் பொலிஸார் வர­வ­ழைக்­கப்­பட்டு வீட்டின் உள்ளே சென்று பார்த்­த­போது ட்ரேஸியின் தாயார் குளி­ய­ல­றையில் இறந்­து­ கி­டந்தார்.

அவர் நோய் கார­ண­மாக இயற்­கை­யாக இறந்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.

ட்ரேஸின் குழந்தை அழுக்­கான நிலையில், உதடுகள் வீங்கிய நிலையில் காணப்பட்டது.

தற்போது அக்குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காய்ச்சலை குணப்படுத்தும் சிறியாநங்கை…!!
Next post பாக். போர் விமானம் விழுந்து நொறுங்கியது – பெண் விமானி பலி…!!