யாழ்.மீசாலையில் வீட்டு வளாகத்தில் மோட்டார் குண்டு..!!
Read Time:48 Second
யாழ்.சாவகச்சேரி, மீசாலை மேற்கு கண்டி வீதியை அண்மித்த பகுதியிலுள்ள வீட்டு வளாகத்தினுள் இருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது.
இந்தக் மோட்டார் குண்டு இன்று காலையில் மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
குப்பைகளை புதைப்பதற்காக குழி ஒன்றை வெட்டும்போதே குறித்த மோட்டார் குண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating