தந்தை மகன் உட்பட மூவர் நீரில் மூழ்கி பலி..!!
Read Time:54 Second
சிலாபம், ஆனவிலுந்தாவ, முத்துபன்னிய குளத்தில் நீராடச் சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 11.30 மணியளவில் நீராடச் சென்ற வேளை இவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தந்தை, 16 வயதுடைய மகன் மற்றும் 17 வயதுடைய உறவுக்கார இளைஞர் ஆகிய மூவரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
சடலங்கள் பிரேத பரிசோதனைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating