திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தீக்குளித்து சாவு..!!

Read Time:1 Minute, 42 Second

downloadகாங்கயம் அருகே உள்ள சிவன்மலையை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 29). கைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி பிரேமலதா (26). பனியன் நிறுவன ஊழியர்.

இவர்களுக்கு கடந்த 2–ந் தேதி தான் திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகளை தலைதீபாவளிக்காக அழைக்க பிரேமலதாவின் தாயார் ஜோதிமணி சிவன்மலைக்கு சென்றார்.

அப்போது துரைராஜிக்கு வேலை இருந்ததால் தலை தீபாவளிக்கு வருமாறு மருமகனுக்கு அழைப்பு விடுத்து விட்டு, தனது மகளை மட்டும் திருப்பூர் பாண்டியன் நகரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். ஆனால் கடுமையான வேலைப்பளு காரணமாக மாமியார் வீட்டிற்கு துரைராஜ் வரமுடியவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த பிரேமலதா, மண்எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி பிரேமலதா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் திருமணமாகி 10 நாட்களே ஆகியுள்ளதால் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி வருகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வை பிரகாசமாக்கும் கார்த்திகை தீப வழிபாடு…!!
Next post கிளர்ச்சியாளர்களிடமிருந்து தப்பிப்பிழைத்த ரஷ்ய விமானி…!!