பழங்குடியின மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் கைது…!!
சத்தீஸ்கர் மாநிலத்தில் பழங்குடியின மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் பலராம்பூர்-ராமானுஜ்கஞ்ச் மாவட்டம் அமர்பூர் கிராமத்தில் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாம்பு பிரஜாபதி. இவர் அங்கு படித்த பழங்குடி மாணவி ஒருவரை ஆடைகள் இன்றி தன் முன் நிர்வாணமாக நிற்கும்படி கூறி உள்ளார்.
இதேபோல் தொடர்ந்து இந்த சிறுமி பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகி உள்ளார். இதனால், பயந்துபோன அந்த சிறுமி, பள்ளிக்கு செல்லவில்லை என பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் விசாரித்தபோது, ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததை தெரிவித்தார். இதேபோல், மேலும் சில மாணவிகளும் ஆசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து ஆத்திரம் அடைந்த அந்த கிராமத்தினர் பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.
பள்ளியின் தலைவர் அயோக் சதாப்தி பாண்டே, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இதை தொடர்ந்து கிராமத்தினர் அங்கிருந்து சென்றனர்.
இதுபற்றி பெற்றோர்கள் புகாரின் பேரில் ஷல்காலி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் பிரஜாபதியை கைது செய்தனர்.
Average Rating