குறைபாடுகளில்லாத ஒரு புகைப்படத்தை எடுக்க 6 ஆண்டுகாலம் அவதிப்பட்ட புகைப்படக்கலைஞர்…!!
Read Time:1 Minute, 9 Second
மீன்கொத்திப் பறவைகளை தனக்கு அறிமுகப்படுத்திய தாத்தாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆலன் மெக்ஃபெட்யென்(46) என்ற புகைப்படக்கலைஞர் ஆறு ஆண்டுகால காத்திருப்புக்குப் பின் துல்லியமான ஒரு புகைப்படத்தை எடுத்துள்ளார். மீனைப்பிடிக்க மீன்கொத்தி தண்ணீருக்குள் முழுகும் வேளையில் நீரின் துளிகள் தெறிக்காத ஒரு புகைப்படத்தை எடுக்க வேண்டும் என்பது ஆலனின் கனவாக இருந்தது. சுமார் ஆறு ஆண்டுகளாக இதற்கான முயற்சியில் ஈடுபட்ட ஆலன் இதுவரை ஏழு லட்சத்து இருபதாயிரம் புகைப்படங்களை எடுத்துள்ளார். இது தற்போது எளிதாகக் கிடைக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ள கேமராவில் அதிர்ஷ்டத்தால் மாட்டிக்கொண்ட ஷாட் நிச்சயமாக இல்லை.
Average Rating