அரசியல் கைதிகளின் விடுதலைக்காக உயிர்நீத்த மாணவனுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி…!!
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தனது உயிரை தியாகம் செய்த மாணவனுக்காக, யாழ். பல்கலைக்கழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் பல்லைக்கழகத்தில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு, மாணவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.
அதன்போது, மாணவனின் உயிர் தியாகத்திற்கு பதில் கூறு நல்லாட்சி அரசே? இன்று பாடசாலை மாணவன் நாளை யார்? என்று எழுதப்பட்ட சுலோக அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி உயர்தரத்தில் கற்கும் மாணவர் ஒருவர் கடிதம் ஒன்றை எழுதிவிட்டு இன்று வியாழக்கிழமை காலை ஓடும் புகையிரதம் முன் பாயந்து தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
Average Rating