14 வயது மாணவியை பலாத்காரம் செய்த கனடிய ஆசிரியர்: கடுமையான தண்டனை விதிக்குமா நீதிமன்றம்…!!

Read Time:2 Minute, 31 Second

gang_sexual_002கனடா நாட்டில் கல்வி கற்க வந்த 14 வயது மாணவியை ஆசிரியர் மற்றும் அவரது காதலி சேர்ந்து கூட்டாக பலாத்காரம் செய்துள்ளது தற்போது பொலிசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
றொரொன்ரோ நகருக்கு அருகில் உள்ள கிழக்கு டோன்வே பகுதியில் Kevin Chan(32) மற்றும் Kayla Drumonde(23) என்ற காதலர்கள் வசித்து வந்துள்ளனர்.

இவர்கள் வசிக்கும் வீட்டிலேயே அப்பகுதி மாணவ, மாணவிகளுக்கு டியூசன் வகுப்புகளை பல வருடங்களாக எடுத்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு 14 வயது மாணவி ஒருவர் இவர்களிடம் கணக்கு பாடம் கற்றுக்கொள்ள டியூசனில் இணைந்துள்ளார்.

மேலும், இருவரிடம் நெருங்கி பழகிய அந்த மாணவி அவர்களது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இது போன்ற ஒரு நாளில், பாடம் கற்க வந்த மாணவியை காதலன் பலாத்காரம் செய்ததாகவும் அதற்கு அவரது காதலி உடந்தையாக இருந்ததாகவும் பரபரப்பு புகார் எழுந்தது.

இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து பொலிசார் விசாரணை நடத்தி வந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக றொரொன்ரோ பொலிசார் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், சிறுமியை பலாத்காரம் செய்தது விசாரணையில் உறுதி செய்ய்பட்டுள்ளதால் அவர்கள் மீது சட்ட ரீதியாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் ஏற்கனவே நிகழ்ந்திருக்க வாய்ப்பு உள்ளமையால், தகவல் அறிந்தவர்கள் பொலிசாரிடம் தெரிவிக்கமாறும் அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கல்வி கற்க வந்த மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைப்பேசியில் வந்த குறுஞ்செய்தி: 4 விமான பயணிகளை இறக்கி விசாரணை…!!
Next post உலகிலேயே அதிக வெப்பமான ஆண்டு 2015: காலநிலை அமைப்பு தகவல்…!!