வேலையில்லா காரணத்தால் தெருவில் பிச்சை எடுத்தால் என்ன நடக்கும்? (வீடியோ இணைப்பு)…!!
தங்குவதற்கு வீடற்ற நபர் தெருவில் பிச்சை எடுத்தால் மக்களின் எதிர்வினைகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வதற்காக வீடியோ ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள ஒரு தெருவில் இரண்டு சகோதரர்கள் அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
அப்போது, அவ்வழியாக வந்தவர்கள் தங்களிடம் உள்ளவற்றை கொடுத்துச்செல்கின்றனர், இந்நிலையில் அவ்வழியாக வந்த பாதுகாப்பு காவலராக பணிபுரியும் பெண்மணி ஒருவர் முதலில் அமர்ந்திருக்கும் இளைஞருக்கு காசு கொடுக்கிறார்.
அதற்கு அடுத்தபடியாக அமர்ந்திருந்த இளைஞர், உங்களிடம் ஏதாவது சில்லரை இருந்தால் கொடுங்கள், எனக்கு பசியாக உள்ளது, எனக்கு சாப்பிடுவதற்கு வழி இல்லை என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த பாதுகாப்பு காவலர், நீ ஒரு வேலையை பெற்றுக்கொள், நான் தினந்தோறும் வேலை பார்ப்பதற்காக எழுந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இதற்கு அந்த இளைஞர் மறுமொழியாக, என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது, ஆனால் தற்போது எனக்கு சில சிக்கல்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலாக அந்த காவலர், எனக்கு அதைப்பற்றிக் கவலையில்லை, முதலில் நீ வேலையை தேடிக்கொள் என்று கூறி அவரின் கன்னத்தில் இரண்டு முறை அடித்துவிட்டு, நீ வேலையை தேடிக்கொள் என்று கூறிவிட்டு செல்கிறார்.
தற்போது யூடியுபில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ, இதுவரை 8. 2 மில்லியன் முறை பார்க்கப்பட்டுள்ளது.
Average Rating