கல்யாண ஆசை காட்டி கைவிட்டவர் கைது

Read Time:1 Minute, 38 Second

திண்டுக்கல் அருகே பெண்ணுக்கு திருமண ஆசை காட்டி மோசம் செய்தவரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம், ஏ வெள்ளோடு அருகே கரட்டழகன் பட்டியை சேர்ந்தவர் முருகன். அரவது மகள் உஷா ( 20 ). அதே ஊரை சேர்ந்த வெள்ளைசாமி என்பவர் மகன் மணிமாறன். மணிமாறனுக்கும் உஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்பு அதுவே காதலாக மலர்ந்துள்ளது. காதல் முற்றிய நிலையில் உஷாவை திருமணம் செய்து கொள்ளவதாக மணிமாறன் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதைக் கூறியே உஷாவை பல இடங்களுக்கு அழைத்து சொன்றுள்ளார். அங்கு உஷாவுடன் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளார். இந்த நிலையில் உஷா தன்னை திருமணம் செய்ய கோரி மணிமாறனை வற்புறுத்தி உள்ளார். ஆனால் இதற்கு மணிமாறன் மறுத்துவிட்டார். இதனால் உஷா திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் உஷாவை நம்ப வைத்து மோசம் செய்த மணிமாறன், அவருக்கு உதவியாக இருந்த அவரது தந்தை வெள்ளைசாமி, சகோதரர் வீரபாகு, அவரது தாய் வெள்ளையம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இலங்கை தயக்கத்துடன் எதிர்ப்பு
Next post பாக். தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலி