அதி உயர் மின்னழுத்த கம்பத்தில் வேன் மோதி விபத்து..!!

Read Time:1 Minute, 45 Second

timthumbகொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த வேன் ஒன்று மைலம்பாவெளியில் வீதியின் மருங்கில் நடப்பட்டிருந்த அதி உயர் 33 ஆயிரம் வோல்டேஜ் கொண்ட கம்பத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாரதி நித்திரையில் இருந்ததால் வாகனம் கட்டுப்பாட்டை மீறி வீதியின் மறு மருங்கிலிருந்த மின் கம்பத்தில் மோதி வேன் விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிகாலை 4.20 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் ஏறாவூர் நகரம் உட்பட இன்னும் சில பிரதேசங்களில் சில மணி நேரங்கள் மின்சாரம் தடைப்பட்டிருந்தது

வேன் சேதமடைந்துள்ளதோடு வீதியின் அருகிலிருந்த வீட்டு வேலி, சிறிய கடை, மின் கம்பம், மின் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகள் என்பனவும் விபத்தின் காரணமாகச் சேதமடைந்துள்ளன.

வாகனத்தைக் கைப்பற்றிய பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 வருடங்களுக்கு முன்னர் வெளிநாட்டில் காணாமல்போன மனைவி கள்ள கணவனுடன் கைது..!!
Next post மாணவன் செந்தூரனின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை : முதலமைச்சர்..!!