மகனின் பிறந்த நாளுக்கு கேக் வாங்க பணம் இல்லை!இறால் பிடித்து விற்பனை செய்ய களப்புக்கு சென்ற தந்தையை முதலை இரையாக்கியது..!!

Read Time:2 Minute, 1 Second

timthumb (1)கொக்­கல ஓயாவில் இறால் பிடிக்க சென்று முத­லைக்கு இரை­யாகி உயி­ரி­ழந்த நப­ரொ­ருவர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார்.

இவ­ரது இளைய மக­னது ஏழா­வது பிறந்தநளை கொண்­டா­டு­வ­தற்கு கேக் வாங்க பண­மில்­லாத கார­ணத்தால் அதற்கு முதல் நாளான 24 ஆம் திகதி கொக்­கல களப்­புக்கு சென்று இறால் பிடித்து விற்­பனை செய்­வ­தற்­காக சென்­றுள்ளார்.

இதன்போதே அவர் முத­லைக்கு இரை­யாகியுள்ளார். இந்­நி­லையில் மறு நாள் வரை அவர் வீடு திரும்­பாத கார­ணத்தால் உற­வி­னர்கள் பொலிஸ் நிலை­யத்தில் முறை­ப்பாடு செய்­த­துடன் தேடுதல் நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­பட்ட போது சடலம் நேற்று முன்­தினம் மீட்­கப்­பட்­டது.

இவ்­வாறு உயி­ரி­ழந்த நபர் கத­லுவ குரு­கந்த பிர­தே­சத்தை சேர்ந்த நளின் பிரசாத் (32) என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இவரின் மனைவி சில மாதங்­க­ளுக்கு முன்­ப­தாக வெளி­நாடு சென்­றி­ருந்த நிலையில் தனது இளைய மகனின் பிறந்த நாளுக்­காக கேக் வாங்க பண­மில்­லாத கார­ணத்தால் அதற்கு முதல் நாளான 24 ஆம் திகதி கொக்­கல களப்­புக்கு இறால் பிடிப்­ப­தற்­காக இவர் சென்­றுள்­ளமை தெரிய வரு­கி­றது.

சடலம் பிரேத பரி­சோ­த­னை­க்­காக கரா­பி­டிய வைத்­தி­ய­சா­லையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவன் செந்தூரனின் உணர்வுகளை அரசாங்கம் புரிந்து கொள்ளும் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை : முதலமைச்சர்..!!
Next post பனியால் உறைந்துபோன சாலையில் உற்சாக ஸ்கேட்டிங்: வீடியோ இணைப்பு…!!