மகனின் பிறந்த நாளுக்கு கேக் வாங்க பணம் இல்லை!இறால் பிடித்து விற்பனை செய்ய களப்புக்கு சென்ற தந்தையை முதலை இரையாக்கியது..!!
கொக்கல ஓயாவில் இறால் பிடிக்க சென்று முதலைக்கு இரையாகி உயிரிழந்த நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவரது இளைய மகனது ஏழாவது பிறந்தநளை கொண்டாடுவதற்கு கேக் வாங்க பணமில்லாத காரணத்தால் அதற்கு முதல் நாளான 24 ஆம் திகதி கொக்கல களப்புக்கு சென்று இறால் பிடித்து விற்பனை செய்வதற்காக சென்றுள்ளார்.
இதன்போதே அவர் முதலைக்கு இரையாகியுள்ளார். இந்நிலையில் மறு நாள் வரை அவர் வீடு திரும்பாத காரணத்தால் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் தேடுதல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட போது சடலம் நேற்று முன்தினம் மீட்கப்பட்டது.
இவ்வாறு உயிரிழந்த நபர் கதலுவ குருகந்த பிரதேசத்தை சேர்ந்த நளின் பிரசாத் (32) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் மனைவி சில மாதங்களுக்கு முன்பதாக வெளிநாடு சென்றிருந்த நிலையில் தனது இளைய மகனின் பிறந்த நாளுக்காக கேக் வாங்க பணமில்லாத காரணத்தால் அதற்கு முதல் நாளான 24 ஆம் திகதி கொக்கல களப்புக்கு இறால் பிடிப்பதற்காக இவர் சென்றுள்ளமை தெரிய வருகிறது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக கராபிடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் ஹபராதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating