நாளை 18 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள் விபரம்…!!
Read Time:42 Second
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை 18 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இதன்படி நாளை முற்பகல் 11 மணிமுதல் மறுநாளான ஞாயிறு காலை வரையில் நீர் விநியேகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள் வருமாறு :
கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை, கொட்டிகாவத்தை, முல்லேரியா.
Average Rating