என்னை கவர்ச்சியாக படம் எடுத்து மிரட்டினார்கள்…!!

Read Time:3 Minute, 15 Second

Hassan-500x500கதாநாயகிகள், டைரக்டர்கள் மோதல் அவ்வப்போது தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்துவது உண்டு. ‘மிருகம் படப்பிடிப்பில் டைரக்டர் சாமி தனது கன்னத்தில் அறைந்ததாக நடிகை பத்மபிரியா அழுது பிரச்சினையை கிளப்பி அவர் மீது நடவடிக்கை எடுக்க வைத்தார்.

‘நய்யாண்டி’ படத்தில் தனுசுடன் நடித்தபோது டைரக்டர் தனது இடுப்பை ஆபாசமாக படம் எடுத்து விட்டதாக நடிகை நஸ்ரியா சர்ச்சையை கிளப்பி ஆவேசப்பட்டார். இதனால் அந்த காட்சியை நீக்கிவிட்டு படத்தை திரைக்கு கொண்டு வந்தனர். நடிகை பிரியங்கா ‘கோடை மழை’ படத்தில் தன்னுடன் நடித்த களஞ்சியம் தன்னை அடித்து விட்டதாக புகார் கூறினார்.

நடிகை அஞ்சலி ‘ஊர்சுற்றிப்புராணம் படப்பிடிப்பில் டைரக்டருடன் தகராறு செய்து, அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று மறுத்து விட்டார். நடிகை மீனாட்சி கடந்த வாரம் சென்னையில் நடந்த ‘நேர்முகம்’ படப்பிடிப்பில் உதவி இயக்குனர் தன்னிடம் தவறாக பேசியதாக முறைத்து அவரை கன்னத்தில் அறைந்தார். இதனால் படக்குழுவினர் அவரை சிறை பிடித்து தாக்க முயற்சித்தனர். பிறகு மீனாட்சி மன்னிப்பு கேட்டதன் மூலம் பிரச்சினை ஓய்ந்தது.

அதுபோல் நடிகை அன்சிபா ஹாசனும் தன்னை கவர்ச்சியாக படம் எடுத்து படக்குழுவினர் மிரட்டியதாக தற்போது புகார் கூறியுள்ளார். இவர் தமிழில் ‘நாகராஜ சோழன் எம்.எல்.ஏ,’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். ‘பரஞ்சோதி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்தார். மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடி வசூல் அள்ளிய ‘திரிஷ்யம்’ படத்தில் மோகன்லால்-மீனாவின் மகளாக நடித்தார்.
அன்சிபா ஹாசன் கூறும்போது, ‘‘நான் தமிழ் படங்களில் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்பட்டேன்.

இதற்காக வாய்ப்பு தேடினேன். சில படங்களில் நடிக்கவும் செய்தேன். ஒரு படத்தில் நடித்தபோது எனக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டது. அந்த படத்துக்காக என்னை கவர்ச்சியாக படம் எடுத்தனர். குட்டை பாவாடையை அணிய வைத்து புகைப்படம் எடுத்தார்கள்.

அந்த காட்சிகள் படத்துக்கு தேவை இல்லை. ஆனாலும் வற்புறுத்தி படம் பிடித்தார்கள். இதுபற்றி கேட்டபோது என்னை அவர்கள் மிரட்டினார்கள்.’’ என்றார். இந்த புகார் தமிழ் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாளை 18 மணித்தியாலங்கள் நீர்விநியோகம் துண்டிக்கப்படும் பிரதேசங்கள் விபரம்…!!
Next post இத்தாலியின் முக்கிய நகரத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்…!!