கிருஷ்ணகிரி அருகே 4கை, 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை..!!
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பூனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி(28). கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி லட்சுமி (26). இவர்களுக்கு திருநாவுக்கரசு (5), சுபாஷினி (3) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். மூன்றாவது முறையாக கர்ப்பமான லட்சுமி, பிரசவத்திற்காக பெருகோபனப்பள்ளியிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு 3 கிலோ 400 கிராம் எடை கொண்ட ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 4 கைகள், 4 கால்கள் இருந்தன. வயிற்றுப்பகுதியில் பெரிய கட்டி போல இருந்துள்ளது. இதை பார்த்த செவிலியர்கள் உடனடியாக, தாய் மற்றும் குழந்தையை கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை மருத்துவர்கள் பரிசோதனை செய்து, மேல்சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் சிறப்பு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிசய குழந்தையை ஏராளமானோர் வந்து பார்த்தனர்.
Average Rating