7 பொலிஸாரின் தலையை வெட்டிய தலிபான்கள்
Read Time:1 Minute, 4 Second
ஆப்கானிஸ்தானில் கந்தகாரில் ஆர்கன்டாப் நகர் தலீபான் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. இராணுவம் அவர்களை விரட்டி விட்டு அந்த பகுதியை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தலீபான் தீவிரவாதிகள் அந்த நகருக்குள் நுழையாமல் தடுப்பதற்காக நகருக்கு வெளியே சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. தலீபான் தீவிரவாதிகள் கூட்டமாக அந்த சோதனைச்சாவடிக்குள் புகுந்தனர், அவர்கள் அங்கு காவலுக்கு இருந்த 7 பொலிஸ்காரர்களின் தலையை வெட்டிக் கொன்றனர். அவர்கள் அங்கு தாக்குதல் நடத்திவிட்டு சென்ற பிறகு 6 இராணுவ அதிகாரிகளை காணவில்லை. ஆப்கானிஸ்தானில் இந்த ஒரு ஆண்டில் மட்டும் 6 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.